வியாழன், 12 செப்டம்பர், 2024

கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெறவில்லை என்றால் டாஸ்மாக் கடைகளை இழுத்துப்பூட்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 


கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெறவில்லை என்றால் டாஸ்மாக் கடைகளை இழுத்துப்பூட்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்
விவசாயிகளின் நிலத்தில் உள்ள தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் கள்ளுக்கு விதிக்கப்பட்ட  தடையை நீக்காவிட்டால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை பூட்டு போடும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபடுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தனர்
வறண்ட பகுதிகளான தர்மபுரி கரூர் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தண்ணீர் இன்றி விவசாயிகள் வேளாண் உற்பத்தி செய்ய முடியாத வேதனையில் உள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து வீணாக கடலில் சென்று கலக்கும் உபரி நீரை வறண்ட ஏரிகளை நிரப்பும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: