வியாழன், 12 செப்டம்பர், 2024

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்புவாரிய சட்டத்தை எதிர்த்து பல்வேறு வழக்குகள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்புவாரிய சட்டத்தை எதிர்த்து மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல்வேறு வழக்குகள் தொடுத்துள்ளோம், பல்வேறு கட்ட தொடர் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்: முகமது ஆரிப்

வக்பு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்தும் வக்புவாரியத்தில் உள்ள சொத்துக்கள் குறித்தும் இஸ்லாமிய மக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாநில தலைவர் முகமது ஆரிப் பேட்டியளித்தார்.

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறைக்கு புதிய நிர்வாகிகள் நியமிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

 ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜுபைர் அகமது தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாநில தலைவர் முகமது ஆரிப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 

அவர் பேசும் போது இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு காங்கிரஸ் கட்சி எந்தெந்த வகையில் பாதுகாப்பாக இருக்கிறது என்று விளக்கி கூறினார். 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முகமது ஆரிப், தொல் திருமாவளவன் நடத்த உள்ள மது ஒழிப்பு மாநாடு குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும் போது, அவர் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தவறு காண்பதில் எதுவுமில்லை என்றார்.

 காங்கிரஸ் கட்சி முழுமையாக மதுவிலக்கிற்கு ஆதரவளிக்கிறது. மதுவுக்கு எதிராக பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறோம் என்றும் வக்பு வாரியத்திற்கு புதிதாக விரைவில் தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் கூறினார். 

மேலும், மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். வக்பு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்தும் வக்புவாரியத்தில் உள்ள சொத்துக்கள் குறித்தும் இஸ்லாமிய மக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் என்பதுடன், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்புவாரிய சட்டத்தை எதிர்த்து மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல்வேறு வழக்குகள் தொடுத்துள்ளோம், பல்வேறு கட்ட தொடர் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் ராஜினாமா குறித்து கேட்டபோது, அது உட்கட்சி விவகாரம் அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை எனவும் விரைவில் வக்பு வாரிய தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் கூறினார். 

இந்த கூட்டத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: