செவ்வாய், 22 அக்டோபர், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.24) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் பெரியகொடிவேரி, பெரும்பள்ளம், வரதம்பாளையம் மற்றும் மாக்கினாங்கோம்பை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (அக்டோபர் 24) வியாழக்கிழமை நடக்கிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெரியகொடிவேரி துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கொடிவேரி, டி.ஜி.புதூர், சின்னட்டிபாளையம், ஏழூர், கொமரபாளையம், கொண்டப்பநாய்க்கன்பாளையம், ஆலத்துக்கோம்பை மற்றும் மலையடிப்புதூர்.

பெரும்பள்ளம் துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கெம்பநாய்க்கன்பாளையம், கடம்பூர், குன்றி, ஏ.ஜி.புதூர், மாக்கம்பாளையம், சின்னக்குளம், தாசரிபாளையம், காடகநல்லி, செல்லிபாளையம் மற்றும்அத்தியூர்.

வரதம்பாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்: வடக்குப்பேட்டை, வரதம்பாளையம், புளியங்கோம்பை, ஜெ.ஜெ.நகர், சந்தைக்கடை, கோம்புபள்ளம், மணிக்கூண்டு, கோட்டுவீராம் பாளையம், கடைவீதி, கொங்குநகர், பெரியகுளம் மற்றும் பாசக்குட்டை. 

மாக்கினாங்கோம்பை துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- அக்கரை கொடிவேரி, காசிபாளையம் மற்றும் சிங்கிரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: