S.K. சுரேஷ்பாபு.
பூலாம்பட்டி ஏரியில் இருந்து 300 கோடியில் தனிக்குழாய் அமைத்து கொண்டுவரப்பட்ட தண்ணீரை கால்நடை பூங்காவிற்கு பயன்படுத்தாமல் திட்டத்தை கிடப்பில் போட்டதற்கு எதிர்ப்பு. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி ஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வி. கூட்டு ரோடு பகுதியில் ஆயிரம் ஏக்கரில் சுமார் 1000 கோடி செலவில் அமைக்கப்பட்ட கால்நடை பூங்கா மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு எடப்பாடி தொகுதி பூலாம்பட்டி ஏரியிலிருந்து சுமார் 300 கோடியில் தனிக்குழாய் அமைத்து கொண்டுவரப்பட்ட தண்ணீரை கால்நடை பூங்காவிற்கு பயன்படுத்தாமல் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமைக்க உள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு இந்த தண்ணீரை முழுவதும் எடுத்துச் செல்ல ஒப்பந்தம் போடப்பட்டதை கண்டித்தும், மேற்படி கால்நடை பூங்கா முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வராத கண்டித்தும் கால்நடை பூங்கா எதிரில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி ஆர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றதில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு மாநில பொருளாளர் கொண்டலாம்பட்டி எம் தங்கராஜ்,மண்டல செயலாளர் புளியங்குறிச்சி பெருமாள், சேலம் மாவட்ட செயலாளர் தங்கவேல் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கங்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
0 coment rios: