சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் அரசு சட்டக் கல்லூரிக்கு மறைந்த வீரபாண்டியார் பெயரையும், சேலம் விமான நிலையத்திற்கு வாழப்பாடி யார் பெயரையும் சூட்ட வேண்டும். சேலத்தில் நடைபெற்ற வாழப்பாடியார் மற்றும் வீரபாண்டியார் புகழஅஞ்சலி கூட்டத்தில் தீர்மானம்.
சேலம் மாவட்ட சமூக நீதி சத்திரியர் பேரவை மற்றும் சத்திரியர் சேனை அமைப்பின் சார்பில் மறைந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி மற்றும் மறைந்த தமிழக முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோரது புகழஞ்சலி கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. வாழபாடியார் அறக்கட்டளையின் தலைவர் வாழப்பாடி இராம சுகந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வன்னியர் பொதுச்சொத்து நல வாரியத்தின் தலைவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜெயராமன் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் முருகேச பூபதி அக்னி குல வன்னிய குல சத்திரிய சங்கத்தை சேர்ந்த எம்எஸ்வி மணி மற்றும் தொழிலதிபர் மாரியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த புகழஞ்சலி கூட்டத்தில் தமிழக அரசு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழப்பாடி யார் மற்றும் வீரபாண்டியார் ஆகியோரது புகைப்படங்களை திறந்து வைத்து மலர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மறைந்த வாழப்பாடி யார் மற்றும் வீரபாண்டியார் ஆகியோரது வாழ்க்கை பயணத்தில் அவர்கள் ஏழை எளியவர்களுக்கு மேற்கொண்ட எண்ணற்ற திட்ட பணிகள் குறித்து புகழாரம் சூட்டப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு சட்டக் கல்லூரிக்கு மறைந்த முன்னாள் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டியாரின் பெயரையும், இதே போல சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு மறைந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் வாழப்பாடியார் பெயர்களை சூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்ததுடன் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டன. அது மட்டுமல்லாமல் சேலம் மாநகரத்தின் மையப் பகுதியில் தமிழக அரசின் சார்பில் காலம் சென்ற வாழப்பாடி யார் மற்றும் வீரபாண்டியார் ஆகியோர்களுக்கு திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அதற்கான இடம் தமிழக அரசு ஒதுக்கி தந்தாலும் சரி தங்களது அமைப்பின் சார்பில் இரண்டு மூத்த தலைவர்களுக்கும் தங்களது அமைப்பின் சார்பில் சிலை நிறுவப்படும் என்றும் தமிழக முதல்வருக்கு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் மற்றும் வாழப்பாடியார் அறக்கட்டளையின் தலைவர் வாழப்பாடி ராமசுந்தன் ஆகியோர் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் புகழஞ்சலி கூட்டத்தை நடத்திய அமைப்புகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் மறைந்த தலைவர்களின் ஆதரவாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: