சனி, 5 அக்டோபர், 2024

தமிழக அரசு மிக விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதன் வாயிலாக யாருக்கு எவ்வளவு சதவிகித இட ஒதுக்கீடு என்பதனை நிர்ணயிக்க வேண்டும். சேலத்தில் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் அதியமான் பேட்டி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழக அரசு மிக விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதன் வாயிலாக யாருக்கு எவ்வளவு சதவிகித இட ஒதுக்கீடு என்பதனை நிர்ணயிக்க வேண்டும். சேலத்தில் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் அதியமான் பேட்டி.

ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் அதியமான் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கடந்த 2009 ல அருந்ததியர் மக்களுக்கு உள்ள இட ஒதுக்கீடு மூன்று விழுக்காடு வழங்கி அது இன்று வரைக்கும் நடைமுறையில் இருந்து கொண்டிருப்பது அதை எதிர்த்து ஒரு சிலர் வந்து வழக்கு தொடர்பாக  மன்றத்துக்கு போனார்கள். அந்த வழக்கு தமிழ்நாட்டு உடைய உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. அந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் ஏழு பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது செல்லும் மாநில அரசுக்கு உள்ளிட ஒதுக்கீடு  வழங்குவதற்கான அதிகாரம் இருக்கிறது.  இன்னும் கூடுதலாக நல்ல தரவுகளை சேகரித்து இன்னும் பின்தங்கியுள்ள ஒரு சில சமூகங்களுக்கும் அப்படிப்பட்ட உள்ளிட ஒதுக்கீடுகளை வழங்கலாம் என்று தீர்ப்பு கொடுத்தது என்று அதியமான் தெரிவித்தார்.
அதேபோல கடந்த கடந்த காலத்தில் கொடுக்கப்பட்ட அந்த தீர்ப்பு செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி வந்த பிறகு கடந்த 30ஆம் தேதி அன்று தமிழ்நாட்டினுடைய விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய தலைவர் திருமாவளவன் அவர்கள் அதை எதிர்த்து ஒரு சீராய்வு மனுவை தாக்கல் செய்தான் அந்த தீர சீராய்வு மனுவுக்கு,  நேற்றைக்கு அதையே வந்து அந்த சீராய்வு  மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றத்தினுடைய அதே அமர்வு நேற்றைக்கு தீர்ப்பு வழங்கிருக்கிறது. ஆக தமிழ்நாட்டு தந்தை பெரியார் அவர்களுடை சமூக நீதியின் உடைய பாதையில இந்த தீர்ப்பு என்பது ஒரு உண்மையிலே விளிம்பு நிலை மக்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்றார். அதே நேரத்தில் அவர்களோடு உரிமை நிலை நாட்டப்பட்டிருக்கிறது என்பதை தான் இந்த தீர்ப்பு இன்றைக்கு தீர்ப்பின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டுல கடந்த பத்தாண்டுகளாக மேடைகளிலே சமூக நீதியை பற்றியும் அதேபோல விழிப்பு நிலை மக்கள் பற்றியும் இன்னும் பல்வேறு விதைகளும் மேடையிலே சமூக நீதியைப் பற்றி பேசிக்கொண்டிருந்த சில தலைவர்களுடைய உண்மையான முகம் என்னவென்று இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது. அவர்கள் விளிம்பு நிலை மக்களுக்கு சாதகமாக இல்லை அவர்கள் ஆதிக்க தலித் மக்களுக்காக இருக்கிறார்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய நடவடிக்கை மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே இந்த தீர்ப்பின் மூலம் தமிழ்நாடு அரசு வழங்கப்பட்ட அந்த உள்ள இட ஒதுக்கீடு என்பது நிலைநாட்டப்பட்டு இருக்கிறது.  என்பது மட்டுமல்ல இதன் மூலம் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருக்கிற அருந்ததியர் மக்கள் மீண்டும் அதை நிலை நாட்டுவதற்குரிய வாய்ப்பு இன்றைக்கு கிடைத்திருக்கிறது . ஆதித்தமிழர் பேரவை சார்பிலே நாம் இன்னும் சில கோரிக்கைகளை வைக்க இருக்கிறோம். அது என்ன கோரிக்கை என்று சொன்னால் இதுவரைக்கும் நமக்கு உள்ளட ஒதுக்கீடு 15% தில் மூன்று விழுக்காடு தான் என உள்ள இட ஒதுக்கீடு  வழங்கப்பட்டிருக்கிறது. அதையே இவர்கள் முடியாது என்று அதை எதிர்த்து  தமிழ்நாட்டில் இருக்கிற ஆதிக்க தலித்கள் எதிர்த்து பிரச்சினைகள் செய்தார்கள்.  இப்ப நாம என்ன கேட்க போறேன்னா ஒட்டுமொத்த முழு 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டையும் கேட்டகிரி சேஷம் வகைப்படுத்துதல் ஒட்டுமொத்தமும் வகைப்படுத்த யார் முன்னேறி இருக்காங்க யார் முன்னேறில் அப்படிங்கறத இந்த அரசு மிக விரைவில சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து அதன் மூலம் கண்டுபிடிச்சு இந்த கேட்டகிரி சேஷம் முன்னேறியவர்களுக்கு இவ்வளவு பர்சன்ட் பின்தங்கி இருக்கிறவர்களுக்கு இன்னும் எவ்வளவு பெர்ஸண்டா என்பதை தமிழ்நாடு அரசு மிக விரைவிலே நிர்ணயிக்க வேண்டும். என்றும் தெரிவித்தார்.
வெறும் 3% துடன்  நிற்க கூடாது, ஒட்டு மொத்த 18% அந்த வகைப்படுத்துதலுக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன்னா இப்போ தமிழ்நாட்டுல மொத்தம் மூணு ஜாதிங்க பல்லர் பறையர் மற்றும் அருந்ததியினர் 3 சாதி இருக்கிறது.  ஒவ்வொரு சாதிக்கும் ஏழு பேர் கொண்ட குழு இருக்குங்க அவங்களுக்கு ஒட்டுமொத்தமாகவே ஏழு பேர் தான்.  ஒரு சாதி என்ன ஏழு பேரும்தான் அது குழு அருந்ததியினருக்கு  2009 க்கு முன் தமிழ்நாட்டிலேயே யார் யாரெல்லாம் எப்படி இருந்தார்கள் எந்தந்த சாதி அவர்களுடைய நிலைப்பாடு என்ன அரசுல அவங்களுடைய பதவிகள் என்ன அதிக அரசியல்ல எம்எல்ஏ எம்பி இன்னும் பல்வேறு மேயர் இன்னும் என்னென்ன பதவிகள் இருக்கோ யார் யார் எவ்ளோ இருக்கிறார்கள் என்றும், அதேபோல அரசாங்க பதவிகள்ல எவ்வளவு ஐபிஎஸ் இருக்காங்க எவ்வளவு இருக்காங்க எவரும் டி.ஆர்.ஓ இருக்கிறாங்க எவ்வளவு தாசில்தார் இருக்காங்க எவ்வளவு நீதிபதி இருக்காங்க எவ்வளவு மருத்துவர்கள் இருக்காங்க எவ்வளவு பொறியாளர்களுக்கும் 2003 எவ்வளவு எடுத்தாங்க இப்ப 2009க்கு பிறகு எவ்ளோ எடுத்து இருக்காங்க புள்ளி விவரம் எடுத்து அதன் பிறகு மீண்டும் இதை பக்காவா வகைப்படுத்தி கொடுக்க வேண்டும் ஏன்னா இப்ப 10 புள்ளி வாங்கி கொடுக்க வேண்டும் என்று வன்னியர் சமுதாயம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
அப்போ அவங்கள பார்க்கும்போது இப்ப புள்ளி ஒரு செய்தி என்ன வந்திருக்கிறது. என்று சொன்னால் அவங்க அரசாங்கத்துல 10.5க்கு மேல் இப்பவே அவர்கள் இருக்கிறார்கள் என்கிற புள்ளி விவரம் வந்திருக்கிறது.  ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருப்பவர்களே மீண்டும் அனுபவிக்கிற அந்த சூழல் பட்டியலிட மக்களிலும் இருக்கிறார்கள் அப்படி இருக்கிறார்கள் உண்மையிலே அனுபவிப்பவர்களே மீண்டும் மீண்டும் அனுபவிப்பதை தடுத்து பாதிக்கப்பட்டு  இருக்கிறாங்களா அவங்களுக்கு அந்த வாய்ப்பு தர வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் அதற்கு இந்த அரசு ஒரு கமிஷன் நியமிக்க வேண்டும். நியமிக்கும் ஒரு கமிஷன் எப்படி அன்றைக்கு உள்ளிட ஒதுக்கீடு வழங்குவதற்கு மாண்புமிகு ஜனார்த்தனன் கமிஷன் என்கிற ஒரு நீதிபதியை நியமித்து ஒரு அறிக்கை கொடுத்தார்கள் அதேபோல இப்போதும் ஒரு புள்ளி ஒரு எடுத்து யார் யார் என்ன நிலையில் இருக்கிறார்கள் இதுவரைக்கும் யார் யார் அனுபவிச்சிட்டு இருக்காங்க இதுவரைக்கும் அது தொடாதவர்கள் அந்த அரசு பெரிய பத விகளை யார் அதெல்லாம் கண்டுபிடிச்சு அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதுதான் ஆதித்தமிழர் பேரவைனுடைய கோரிக்கை என்றும் தெரிவித்தார் அதியமான். இதில் என்னன்னா விளிம்பு நிலை மக்களிடம் யார் இருக்கிறார்கள் எளிய மக்களுக்கும் அதிகாரம் அப்படின்னும் மேடையில நிறைய  தலைவர்கள் எல்லாம் பேசுனாங்க அப்ப எளிய மக்களுக்கு அதிகாரங்கள் போது இப்ப எளிய மக்கள்கிட்ட எந்த தலைவரும் நிக்கல எல்லாம் வந்து அது ஆதிக்க ஜாதி பட்டியல் இன மக்களோடு தான் அந்த தலைவர்கள் நிற்கிறார்கள். ஆக அவர்கள் மேடையில் பேசுவது ஒன்று நடைமுறையில் அவர்கள் நடந்து கொள்வது இன்னொன்று என்பதை ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கு இன்றைக்கு வெளிச்சம் போட்டு இந்த நடவடிக்கைகள் காட்டி இருக்கிறது. திருமாவளவன் குறித்த கேள்விக்கு ,  உண்மை கூட்டணிக்குள்ள ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து இருக்குங்க அது அவங்க செய்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் இதுல வந்து கூட்டணியில் பயணித்துக் கொண்டே கூட்டணியினுடைய ஒரு அரசு ஏற்படுத்திய கூட்டணி அரசு தான். அந்த உள்ளிட ஒதுக்கீடு  கொடுத்தது அதை எதிர்த்தே ஒரு ரிவ்யூ பெட்டிஷன் போடுகிற ஒரு கூட்டணியாக அவரும் பயணிச்சிட்டு இருக்காரு அவங்களுக்கு அத பத்தி எல்லாம் கவலை இல்லைங்க,  வாய்ப்பு பார்த்துக்கிட்டே இருப்பாங்க எங்கே அதிகமான வாய்ப்பு இருக்கிறதோ அங்க போறதுக்கான ஒரு முயற்சி அவங்க எடுத்துட்டு இருப்பாங்க அவங்க விருப்பங்கள் அதை நம்ம இன்னும் சொல்ல முடியாது. எளிய மக்களுக்கும் அதிகாரம் எளிய மக்களுக்கு கூட நான் நினைக்கிறேன் எல்லாத்துக்கும் நான்தான் தலைவர் என்கிற அந்த பிம்பம் இன்றைக்கு உடைந்துவிட்டது எல்லா மக்களுக்கும் தலைவர் நிச்சயமாக கிடையாது. இங்க எல்லாம் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தலைவரும் இரண்டு மூன்று தலைவர்களும் நாலு அஞ்சு தலைவர்களோ இருக்கிறார். ஆக அவர் அப்படி இனிமேல் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
இறுதியாக, தமிழக அரசு கொடுத்ததற்கும் அதை பாதுகாத்ததற்கும் மீண்டும் அதை நிலை நிறுத்தியதற்கும் எல்லாம் சேர்த்து மாற்றி தமிழகம் முதல்வர் அவர்களுக்கு அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நன்றி பாராட்டுகிற ஒரு விழாவை முதல்வர் அவர்களை வைத்து இந்த மேற்குத் தளத்தில் நடத்தலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம் மிக விரைவில் அது நடக்கும் என்றும் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: