செவ்வாய், 19 நவம்பர், 2024

அமைச்சர் சுப்பிரமணியன் நாளை (நவ.20) ஈரோடு வருகை

கோயமுத்தூர் விமான நிலையத்திற்கு நாளை (நவ.20) மாலை 5 மணிக்கு வரும் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இரவு ஈரோடு மாவட்டம் தாளவாடியில் தாங்குகிறார். 

பின்னர், நவ.21ம் தேதி காலை 9 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியரின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு மலைவாழ் மக்களுக்காக புற்றுநோய் கண்டறியும் மற்றும் மாபெரும் பொது மருத்துவ முகாம் தாளவாடி அரேப்பாளையம் மைராடா வளாகத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.

தொடர்ந்து, காலை 11.30 மணிக்கு பவானிசாகர் தொகுதி சேஷன்நகர் துணை சுகாதார நிலையத்தில் ரூ.3.31 கோடியிலான புதிய மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைக்கிறார். இதன்பிறகு, மாலை 4.30 மணிக்கு ஈரோட்டில் இருந்து ரயில் மார்க்கமாக சென்னை புறப்பட்டு செல்கிறார். இரவு 9.30 மணிக்கு சென்னை சென்றடைகிறார். 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: