இந்த நிலையில், பவானி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் நேற்று (நவம்பர் 2) இரவு விடிய விடிய கனமழை பெய்ததின் காரணமாக பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கொடிவேரி அணைப்பகுதியில் பவானி ஆற்றில் வினாடிக்கு 866 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதாலும், தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதாலும், அணையில் இருந்து பாதுகாப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் விழுகின்றது.
இதனால், இன்று (நவம்பர் 3) ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கொடிவேரி அணையை மூடி சுற்றுலா பயணிகள் வர பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.
0 coment rios: