சனி, 23 நவம்பர், 2024

ஈரோடு மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க கால நீட்டிப்பு: நவ.30 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக முதலமைச்சர் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தின விழா உரையில், பொதுப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம் அல்லது டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர் நாளிதழ்களில் அறிவித்திருந்த நிலையில் தற்போது பொதுமக்கள் நலன் கருதி வரும் நவம்பர் 30ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என்று ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: