ஞாயிறு, 3 நவம்பர், 2024

சேலம் அருகே தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் டாக்டர் சுந்தர் பேட்டி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் அருகே தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ்  செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் டாக்டர் சுந்தர் பேட்டி.

சேலம் இரும்பாலை அருகே பூச நாயக்கன்பட்டியில் இரு தரப்பினர்கள் இடையே சமூக இளைஞர்கள் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடைபெற்றன மக்கள் அதிக நடமாட்டம் மிகுந்த இடத்தில் மது அருந்தியதை தட்டி கேட்ட தால் நடைபெற்ற இந்த தாக்குதலில் வீடுகளை சூறையாடி சதீஷ் குமார் ஜெயக்குமார் செல்வராஜ் வெங்கடாசலம் தமிழரசி உள்ளிட்டோர் மீது தாக்குதல் தாக்குதல் நடைபெற்றது இதில் காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருபவர்களை நேரில் சந்தித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வழிகாட்டுதலின் பேரில், சேலம் தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் டாக்டர்.சுந்தர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளிடம் கூறும் போது பூச நாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்ற சம்பவம் ஒரு தரப்பு மற்றொரு தரப்பினர் மீது தாக்குதல் நடைபெற்று உள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடந்த போது அங்கிருந்து கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பாளர்களை கடுமையாக தடுத்து அவர்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால் தாக்குதல் சம்பத்தில் ஈடுபட்டவர்கள் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் சேர்த்து தாக்கியுள்ளனர் என்றும், பாதிக்கப்பட்ட நான்கு நேரில், மூன்று பேர் தனியார் மருத்துவமனையிலும், ஒருவர் கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும், சாதி வெறி தாக்குதல் நடத்திய சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சாதிய வன்கொடுமை சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதோடு பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அனைத்திற்கும் உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதில் சம்பந்தப்பட்ட பேரை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சுந்தர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முழுவதும் ஆதிக்க சமூகத்தை அடக்கும் நிலை நீடித்து வருகிறது குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் குறிப்பாக பட்டியலின மக்களின் சொத்துக்களை அழிப்பதற்காகவே இதுபோன்று செயல்பட்டு வருகின்றனர். போலீசார் இனிவரும் காலங்களில் பட்டியல் இன சமூகத்தில் வசிக்கக்கூடிய பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கின்ற சிலர் உள்ளனர் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

பேட்டியின் போது,  சேலம் தெற்கு ,மாவட்ட பொறுப்பாளர்கள் அசோக்குமார், ஆறுமுகம்,
 அயோத்தி பட்டினம் ஒன்றிய செயலாளர் சண்முக சுந்தரம், ,ஆத்தூர் நகர பொறுப்பாளர திருமாராயர் தலைவாசல் ஒன்றிய பொறுப்பாளர் சசிகுமார் கலந்து கொண்டு ஆறுதல் கூறி சம்பந்தப்பட்ட சாதி வெறி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் வலியுறுத்தினர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: