வியாழன், 21 நவம்பர், 2024

தமிழகத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக நடைபெறுகின்ற கொலை கொள்ளை சம்பவங்கள் காரணமாக ஒரு மாநிலத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு சேலத்தில் பேட்டி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழகத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக நடைபெறுகின்ற கொலை கொள்ளை சம்பவங்கள் காரணமாக ஒரு மாநிலத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு சேலத்தில் பேட்டி.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை  ஆலோசனையின் படி தமிழ்நாடு முழுவதும் கிராம வட்டாரம் நகர பேரூராட்சி மாநகர கமிட்டிகளின் கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனை கூட்டம் சேலம் முள்ளுவாடி கேட் அருகே உள்ள சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ ஆர் பி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மாநகர துணை மேயர் சாரதா தேவி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆன கேவி தங்கபாலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில்,  கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்ட இந்த கூட்டத்தில், கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் வாக்குச்சாவடி முகவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆன கே.வி தங்கபாலு, 
கிராம அளவில் காடுகள் அளவில்  காங்கிரசை புதுப்பிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம் அதன் ஒரு பகுதியாக  சேலம் மாநகர மாவட்டத்தில் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடி அந்த நிகழ்வுகள் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பதை விசாரித்து தெரிந்து கொண்டிருக்கிறோம். மேலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு மாவட்ட பார்வையாளர்களை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் டாக்டர் சொல்லப்பட்டவர்கள் அறிவித்திருக்கிறார்கள். மாவட்ட பார்வையாளர்கள் எல்லா மாவட்டங்களுக்கு சென்று மாவட்ட தலைவரோடும் நிர்வாகிகளோடும் இணைந்து இந்த செயல் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக இன்றைக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சேலம் மாநகர தலைவர் பாஸ்கர் தலைமையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எல்லா வாக்குச்சாவடிகளும் காங்கிரஸ் கட்சியை மீட்டு உருவாக்கம் செய்கிற நல்ல பணியை செய்ததற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த முயற்சி வெற்றி அடையும் என நம்புகிறோம். காங்கிரஸ் கட்சி புதிய நிலையில் புதிய வடிவத்தில் நல்ல முன்னெடுப்புகளை எடுப்பதற்கு வாய்ப்பாக பணி உறுதிப்படுத்துவோம், என்பது எங்களுடைய நோக்கம். தொடர்ந்து பேசிய அவர், ஓசூரில் வழக்கறிஞர் கொலை நடந்திருப்பதையும் நாங்கள் பத்திரிகையிலே பார்த்தோம்.  தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நடக்கிற ஒரு சில குறைகளை வைத்து ஒரு மாநிலத்தின் சட்ட ஒழுங்கை மதிப்பிட முடியாது கூடாது. தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை  பார்த்தால் தமிழ்நாடு எப்பொழுதும் சிறந்த மாநிலமாக இருக்கிறது சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள்  நடப்பதை நாங்கள் கண்டிக்கிறோம். அதை நாம் வரவேற்கவில்லை இன்னும் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக பணியாற்றி இதுபோன்ற செயல்பாடுகள் நடப்பதை தடுக்க வேண்டும் அந்த ஆசிரியை படுகொலையை பற்றி விரிவான அறிக்கை தமிழ்நாடு அரசு காவல்துறை உரிய விசாரணை செய்யும் என நம்புகிறோம்.  அதேபோல வழக்கறிஞர் கொலையும் தவிர்க்க வேண்டும் சில தனிப்பட்ட காரணங்களால் நடைபெறுகிற கொலை கொள்ளைகள் காரணமாக கருதி ஒரு மாநிலத்தில் நிர்வாகத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதே  என்னுடைய பார்வை என்றார். அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செல்வதற்கு மாநில அரசு நல்ல முயற்சிகளை மேற்கொள்ளும் என நாங்கள்  நம்புகிறோம் என்று கூறிய அவர், அரசியல் கட்சிகள் என்றாலே முன்னிலைப்படுத்துவது பஞ்சாயத்து தேர்தல் சட்டமன்றத் தேர்தல் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரஸ் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி பஞ்சாயத்து நிலை பஞ்சாயத்து அரசாங்கம் சட்டமன்றம் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய வெற்றி எங்கள் கூட்டணி பெற்றிருக்கிறது.  இது ஒரு மகத்தான மக்கள் கூட்டியாக திகழ்கிறது. மக்கள் நம்பிக்கை பெற்ற  அரசாக தமிழகத்தில் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் அமைந்திருக்கிற இந்த கூட்டணி சிறப்பாக செயல்பட்டு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாட்டில் பல்வேறு வெற்றிகளை பல நிலைகளில் பெற்று வருகிறோம் என்பது தான். என்றும் தெரிவித்தார் குட்கா மற்றும் போதை பொருட்கள் என்பது யதார்த்த நிலை என்றும்  தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இந்த நிலை இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது, குறிப்பாக போதை மருந்துகள் போதை வஸ்துகள் அதிகமாக வினோக்கப்படுவது குஜராத் மாநிலம் தான் போதை வஸ்துகளை அதிகமாக நாட்டு மக்களிடத்திலே வினியோகிக்கிற நிலை இருக்கிறது. அது தவிர்க்கப்பட வேண்டும் மத்திய அரசு அதற்கு முயற்சி எடுக்க வேண்டும். மாநில அரசு பல முயற்சிகளை எடுத்திருக்கிறது. என்பதையும் நாம் அறிவோம். கடந்த மூன்று ஆண்டுகளில் போதை இல்லா தமிழகம் உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று நாங்கள் விரும்புகிறோம்.  தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் போதை போன்ற தவறான பண்பில் இருந்து மக்கள் விடுபட வேண்டும்.  மக்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க  வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்  எல்லா கட்சிகளுக்கும் பல்வேறு பொறுப்புகளில் இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால்  தமிழ்நாட்டில் இப்பொழுது முழு பலத்தோடு முழு மெஜாரிட்டியோடு தனித்த மெஜாரிட்டோடு திராவிட முன்னேற்ற கழக ஆட்சி இருக்கிறது.  எங்கள் தோழமைக் கட்சி ஆட்சி இருக்கிறது. ஆக இந்த நேரத்தில் துணை முதலமைச்சர் இது போன்ற தேவைகளை பற்றி பேசுவது நல்லதல்ல என்பது என்னுடைய கருத்து என்றும்  இரண்டாவது,  கூட்டணி சம்பந்தமாக அல்லது ஆட்சியில் பங்கு என்ற நிலைப்பாடு எல்லாம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை மட்டுமே எடுக்க  உரிமை உள்ளது  என்பதையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் என்றதோடு,  எங்களுடைய கூட்டணி சிறப்பாக இயங்குகிறது தமிழ்நாட்டில் எங்களோடு  வெற்றி கூட்டணி தலைவர்கள் இணைந்து பேசி எல்லா நிகழ்ச்சிகளையும் சிறப்பாக செய்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார். 
இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் என திரளானூர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: