வெள்ளி, 29 நவம்பர், 2024

விருதுகளை அள்ளி குவித்து வரும் சேலத்தை சேர்ந்த சமூக சேவையாளர் உலக சாதனை .

  
சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

விருதுகளை அள்ளி குவித்து வரும் சேலத்தை சேர்ந்த சமூக சேவையாளர் உலக சாதனை .

சேலத்தைச் சேர்ந்தவர் டாக்டர் நாகா அரவிந்தன். இவர் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனராகவும், ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையில் தலைவராகவும் இருந்து வருவதோடு தன்னலன் பாராமல் எப்பொழுதும் பிறர் நலனுக்காக ஏராளமான சமூக சேவைகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார். இவரின் இந்த செயலை பாராட்டி ஏராளமான விருதுகள் பெற்று குவித்து வந்துள்ளார் டாக்டர் நாதா அரவிந்தன்.
இந்த நிலையில் அவரின் இந்த சிறந்த சமூக சேவை மற்றும் ஏழை எளியவர்களுக்கு உதவும் குணத்தை பாராட்டி, யு எஸ் ஏ புக் ஆப் ஓல்ட் ரெக்கார்டு நிறுவனத்தின் சார்பில் உலக சாதனைக்கான சான்றிதழ் சேலத்தை சேர்ந்த டாக்டர் நாகா.  அரவிந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
அந்தச் சான்றிதழில் நாகா.ஆர்.  அரவிந்தன் சமூக சேவை.  தமிழ்நாடு இந்தியா என்றும்,  இந்தச் சான்றிதழ் நாக ஆர்.. அரவிந்தன் அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் சமூக சேவைக்கான ஏற்றுக்கொள்ளும் பங்களிப்புகளை அங்கீகரித்து, 15 ஆண்டுகளாக ஏழை மக்களுக்கு சமூக சேவை செய்து வருகிறார். 
உங்கள் கடின உழைப்பு.  உறுதியும் பேரார்வமும் சிறந்த தரத்தை அமைத்துள்ளன.  உங்கள் சாதனைகளை அங்கீகரிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
 USA Book of World Records.28.11.2024.
 அலோக் குமார் சர்வதேச தலைவர் இந்தியா. 
டாக்டர்.  iven gacnia குரோஷியாவின் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் குடியரசு. என்றும் குறிப்பிடப்பட்டுள்ள அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறந்த சமூக சேவைக்காகவும் ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மையை பாராட்டியும் தனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த உலக சாதனையாளர் விருது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தொடர்ந்து தன்னால் முடிந்தவரை இந்த சமூக சேவையை தொடர்ச்சியாக முன்னெடுப்பேன் என்று டாக்டர் நாக அரவிந்தன் அவர்கள் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: