சேலம்.
செட்டிநாடு சந்தை 2024 பொருட்காட்சி மற்றும் விற்பனை சேலத்தில் துவக்கம். ஏராளமான ஒரு கலந்து கொண்டு பயன்.
சேலம் நகரத்தார் சங்கத்தின் சார்பில் மூன்றாவது ஆண்டாக செட்டிநாடு சந்தை 2024 என்ற பெயரில் செட்டிநாடு கலைப் பொருட்களை மட்டுமே உள்ளடக்கிய கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சி துவக்க விழாவிற்கு சேலம் நகரத்தார் சங்கத்தின் தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் விஸ்வநாதன் பொருளாளர் அருணாச்சலம் துணைத் தலைவர்கள் லட்சுமணன் நாச்சியப்பன் மற்றும் துணைச் செயலாளர் சுப்பிரமணியன் வெளியிட்டவர் முன்னிலை வகித்த துவக்க விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரும் சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் இராஜேந்திரன் மற்றும் சோனா கல்வி குழுமத்தின் தலைவரும் கல்வி தந்தையுமான வள்ளியப்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்காட்சி மற்றும் விற்பனையினை துவக்கி வைத்தனர்.
67 அரங்குகளுடன் தொடங்கிய இந்த செட்டிநாடு சந்தையில் செட்டிநாடு புகழ் பெற்ற சேலைகள் கலைப் பொருட்கள் தங்கம் மற்றும் வைர நகைகள் வெள்ளி பொருட்கள், ஸ்நாக்ஸ் வகைகள் சைவ வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் சைவ அசைவ உணவு வகைகள் உள்ளிட்ட வகைகள் இடம்பெற்று இருந்தன. குறிப்பாக இந்த சைவ அசைவ உணவு வகைகளில் செட்டிநாட்டிற்கு உரித்தான வெள்ளை பணியாரம் ஆடிக்குள் கந்தர அப்பம் பச்சை தேங்குழல் கவுனி அரிசி பால் பணியாரம் கொழுக்கட்டை பால் கொழுக்கட்டை இடியாப்பம் வகைகள் கடலை மசாலா வகைகள் காண்பவர்களை கவரும் வகையிலும் அதனை ருசிப்பதிலும் ஆர்வம் காட்டினர். அனுமதி இலவசமாக நடைபெறும் இந்த செட்டிநாடு சந்தையில் உள்ள செட்டிநாட்டிற்கு புகழ்பெற்ற கலைப் பொருட்களை பார்வையிடுவதிலும் அதனை வாங்குவதிலும் சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் உள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டியதை பார்க்க முடிந்தது.
இந்த செட்டிநாடு சந்தை குறித்து சேலம் நகரத்தார் சங்கத்தில் செயலாளர் விஸ்வநாதன் நம்மிடையே கூறுகையில், தற்போதுள்ள எந்திரமயமான வாழ்க்கை முறையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை அதற்கான பிரத்தியேக கடைகளுக்கு சென்று வாங்குவதை தவிர்த்து ஆன்லைன் வர்த்தகத்தில் தங்களது முதலீடுகளை செய்து அவர்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்யும் போது அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது என்றும் இது போன்ற கண்காட்சி மற்றும் விற்பனை அல்லது அதற்கான பிரத்தியேக நிறுவனங்களுக்கு சென்று நேரில் வாங்கும் போது அவர்கள் விரும்பும் பொருட்களை நேரடியாக பார்த்தும் தங்களது தேவைக்கு ஏற்ப வாங்க முடியும் என்பதால் ஆன்லைன் வர்த்தகத்தை இனிவரும் காலங்களில் தவிர்த்து இதுபோன்று நடைபெறும் கண்காட்சி மற்றும் விற்பனை அல்லது அதற்கென பிரத்தியேகமாக உள்ள வர்த்தக வணிக நிறுவனங்களுக்கு சென்று பொது மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
0 coment rios: