சனி, 28 டிசம்பர், 2024

ஈரோட்டில் ஓட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கடும் வயிற்று வலி

ஈரோடு கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர் (வயது 52). இவருடைய மனைவி அமுதா. இவர்களது மகள் நீலாம்பரி. இவர்கள் 3 பேரும் கடந்த 21ம் தேதி இரவு கருங்கல்பாளையத்தில் இயங்கி வந்த ஒரு ஓட்டலில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டு உள்ளனர்.
மறுநாள் முதல் கடுமையான வயிற்று வலியால் மூவரும் பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் 3 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல்‌ நலம் சரியாகவில்லை. இதனால் , மூவரும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

பின்னர், இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் குறிப்பிட்ட ஓட்டலில் சோதனை நடத்த உத்தரவிட்டார்.

இதனையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கேசவராஜ், செல்வன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கருங்கல்பாளையத்துக்கு சென்று குறிப்பிட்ட ஓட்டலில் சோதனை நடத்தினர். அப்போது உணவக சமையல் அறை சுகாதாரமற்ற முறையில் இருந்ததும், சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

மேலும், முறையான ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ஓட்டல் தற்காலிகமாக மூடி, அதற்கான உத்தரவு நகலை கடை உரிமையாளரிடம் அதிகாரிகள் வழங்கினர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: