மறுநாள் முதல் கடுமையான வயிற்று வலியால் மூவரும் பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் 3 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல் நலம் சரியாகவில்லை. இதனால் , மூவரும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
பின்னர், இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் குறிப்பிட்ட ஓட்டலில் சோதனை நடத்த உத்தரவிட்டார்.
இதனையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கேசவராஜ், செல்வன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கருங்கல்பாளையத்துக்கு சென்று குறிப்பிட்ட ஓட்டலில் சோதனை நடத்தினர். அப்போது உணவக சமையல் அறை சுகாதாரமற்ற முறையில் இருந்ததும், சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.
மேலும், முறையான ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ஓட்டல் தற்காலிகமாக மூடி, அதற்கான உத்தரவு நகலை கடை உரிமையாளரிடம் அதிகாரிகள் வழங்கினர்.
0 coment rios: