புதன், 18 டிசம்பர், 2024

5 லட்சம் ரூபாய் பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்த ஆன்லைன் புரோக்கர்கள் மனோகரன் மற்றும் கந்தசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

5 லட்சம் ரூபாய் பண மோசடி  மற்றும் கொலை மிரட்டல் விடுத்த  ஆன்லைன் புரோக்கர்கள் மனோகரன்  மற்றும் கந்தசாமி  ஆகியோர் மீது  நடவடிக்கை எடுக்க  கோரி நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்.

நாமக்கல் மாவட்டம்
N. கொசவன்பட்டி, ரோஜா நகர் பகுதியை சார்ந்தவர்கள் S. ராஜ்குமார். M. ராஜசேகரன், K சிவபிரகாசம், S.J உதித்நரேந்தர். மற்றும் M. ரவிகுமார். இவர்களில் சிலர் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்று உள்ளனர். கடந்த 18  மாதங்களுக்கு முன்பு எங்களது இல்லம் தேடி வந்த நாமக்கல் மாவட்டம்- N கொசவம்பட்டி-  VOC நகரில் வசிக்கும் மனோகரன்  என்பவர் எங்களை  கட்டாயபடுத்தி  *அமெசர் வர்த்தம்- ( AMAZER TRADE- Cripto Coin*) ஆன் லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் 15 மாதங்களில் முதலீடு பணம் அதனுடன் சில லட்சங்கள் போனஸ் பணத்துடன் திருப்பி வரும் என்று ஆசை வார்த்தைகள்  கூறியதுடன் அவரும் சில லட்சம் முதலீடு செய்து பல லட்சம் பெற்றதாக கூறியுள்ளார். எங்கள் ஐவரையும் வற்புறுத்தி ரூபாய் 5 லட்சம் மற்றும் பத்தாயிரம் பெற்று கொண்டார். மனோகரன் தன்னுடன் அவரது கூட்டாளி  திருசெங்கோட்டை சார்ந்த கந்தசாமி என்பவரை அழைத்து வந்துள்ளார். தங்களிடம் பெற்ற ஐந்து லட்சத்து பத்தாயிரம் ரூபாயை கந்தசாமியிடம் கொடுத்த மனோகரன், இந்த பணம் உங்களது பெயரில் அமெசர் வர்த்தகத்தில் ( AMAZER Trade ) முதலீடு செய்து பத்திரம்- இரசீது தருவதாக கூறி பணத்தை வாங்கி சென்றனர். கடந்த இரண்டு வருடமாக பெற்று சென்ற எங்களது முதலீடு பணத்திற்கு பத்திரமோ- இரசீதோ கொடுக்காமல் இருந்ததால் எங்களது முதலீடு பணத்தை திருப்பி  கொடுக்க மனோகரனிடம் பல மாதங்களாக கேட்டு போராடி வருகின்றோம்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி அவர்களை அணுகி உள்ளனர். அவரது அறிவுறுத்தலின் பேரில் பாதிக்கப்பட்ட அனைவரும் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், நாமக்கலைச் சேர்ந்த  மனோகரன் அவரது கூட்டாளி கந்தசாமியிடம் பெற்று தருவதாக கூறி வந்த போதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏமாற்றி பண மோசடி செய்து வருகின்றனர் என்றும் கடந்த 17-12-24 அன்று மனோகரனையும், கந்தசாமியையும் கைபேசியில்  தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி கொடுக்க கேட்ட போது  பணம் கேட்டு வீட்டு பக்கம் வந்தால்  அனைவரையும் வெட்டி சாய்ப்பேன் என்று அச்சுறுத்துகின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்த மனுவில், இந்த கொலை மிரட்டல் புகார் மனு மீது விசாரணை மேற்கொண்டு பண மோசடி மற்றும் மிரட்டல் விடும் குற்றவாளிகள் மனோகரன் மற்றும் கந்தசாமி ஆகியோர் மீது உரிய சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதி வழங்க வலியுறுத்தி இந்த புகார் மனுவை அளிக்கின்றோம் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தன ர். மேலும் சேலம் - நாமக்கல் மாவட்டங்களில் 50 கும் மேற்பட்ட அப்பாவி மக்களிடம் , அரசு ஓய்வு பெற்ற ஊழியர்களிடம் கூறி வைத்து மனோகரன், கந்தசாமி ஆகியோர் சுமார் 5 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக பல புகார்கள் நிலுவையில் இருப்பது  தெரியவருகின்றது என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்த புகார் மனு நகல், காவல் துணை கண்காணிப்பாளர்
நாமக்கல் மாவட்டம், காவல் துணை கண்காணிப்பாள திருசெங்கோடு ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: