இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 554 பயனாளிகளுக்கு ரூ.4.93 கோடி மதிப்பீட்டிலும், வருவாய்த்துறையின் சார்பில் 125 பயனாளிகளுக்கு ரூ.95.60 லட்சம் மதிப்பீட்டிலும், தாட்கோ சார்பில் 41 பயனாளிகளுக்கு ரூ.65.04 லட்சம் மதிப்பீட்டிலும், முன்னோடி வங்கி சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.15.22 லட்சம் மதிப்பீட்டிலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.16.02 லட்சம் மதிப்பீட்டிலும், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.44 ஆயிரம் மதிப்பீட்டிலும் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
தொடர்ந்து, வேளாண்மை- பொறியியல் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டிலும், வேளாண்-உழவர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டிலும், வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை, ஈரோடு விற்பனை குழு சார்பில் 5 பயனாளிகளுக்கும், தமிழ்நாடு தொழில் வணிக துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.19.54 லட்சம் மதிப்பீட்டிலும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 82 பயனாளிகளுக்கு ரூ.61.17 லட்சம் மதிப்பீட்டிலும் அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, சமூக நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.17 ஆயிரம் மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கும், தொழிலாளர் துறையின் சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.36.15 லட்சம் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 31 பயனாளிகளுக்கு ரூ.1.94 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 947 பயனாளிகளுக்கு ரூ.10.05 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனையடுத்து, மல்லிகை அரங்கில், தூய்மைப் பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஆணையர் மனிஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல், உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
0 coment rios: