சேலம்.
சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக கோகுலம் மருத்துவமனையில் சிறு துளை இருதய அறுவை சிகிச்சை தொடங்கப்பட உள்ளதாக கோகுல மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் அர்த்தனாரி தகவல்
சேலம் ஐந்து ரோடு பகுதியில் கோகுலம் மருத்துவமனை அமைந்துள்ளது கடந்த 39 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன மருத்துவத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து பொதுமக்களுக்கு சிறப்பான சேவை செய்து வருகிறது.
கோகுல மருத்துவமனையின் மேலாண்மை இயக்குனர் மருத்துவர் அர்த்தனாரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறும் போது இருதய அறுவை சிகிச்சை சிறு துளை மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது இது போன்ற அறுவை சிகிச்சைகள் பெரிய நகரங்கள் மட்டுமே உள்ளன குறிப்பாக சென்னை கோவை உள்ளிட்ட ஒரு சில நகரங்கள் மட்டுமே உள்ள நிலையில் சேலத்திற்கு முதன் முறையாக சிறு துளை இருதய அறுவை சிகிச்சை தொடங்கப்படவுள்ளது வருகின்ற எட்டாம் தேதி இந்த சிகிச்சை முறையை பிரிவை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உறுப்பினர் முருகநாதன் தொடங்கி வைக்கிறார்
இந்த சிறு துளை அறுவை சிகிச்சை என்பது இருதயத்தில் ஏற்படும் கோளாறுகளுக்கு அதிநவீன முறையில் வழி இரத்தப்போக்கு இல்லாமல் செய்யக்கூடிய அறுவை சிகிச்சை என்றும் இந்த அறுவை சிகிச்சை முடிந்த ஒரு சில தினங்களில் அன்றாட பணிகளுக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார் குறிப்பாக மாரடைப்புக்கான பைபாஸ் அறுவை சிகிச்சை உள்ளிட்ட இருதய சம்பந்தமான நோய்களுக்கு சிறு துளை அறுவை சிகிச்சை மிகவும் உதவியாக இருக்கும் எனவும் கூறினார் இந்த சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செயல்படும் எனவும் தெரிவித்தார் பேட்டியின் போது கோகுல மருத்துவமனையில் மருத்துவர்கள் விஜய் ஆனந்த் நாகூர் மீரான் பிரபாகர் செல்லம்மாள் ராஜேஷ், ஜெயதேவ் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: