சனி, 21 டிசம்பர், 2024

பவானி: அம்மாபேட்டை அருகே குடிசை வீடு தீப்பிடித்து விபத்து; நகை, பணம் பொருட்கள் எரிந்து சேதம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள அட்டவணைப்புதூர் கோனமூப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 50). இவர், ஓலையில் குடிசை வீடு அமைத்து அதற்கு மேல் தகரச் சீட்டுகளை போட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று (டிச.21) காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென வீடு தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. எனினும் வீட்டுக்குள் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 5½ பவுன் நகை, டிவி, குளிர்சாதனப் பெட்டி, மளிகை பொருட்கள், துணிகள் எரிந்து நாசமாகிவிட்டதாக கூறப்படுகிறது.

தீயணைப்பு வீரர்களும், அம்மாபேட்டை போலீசாரும் நடத்திய விசாரணையில் விட்டில் உள்ள மின் ஒயரில் கசிவு ஏற்பட்டு, அதனால் ஏற்பட்ட தீப்பொறி மேற்கூரையில் உள்ள ஓலையில் பட்டு தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது. எனினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: