வாடகை கட்டிடங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும். ஜிஎஸ்டியை எளிமையாக்கும் விதமாக பொருட்கள் உற்பத்தி செய்யும் இடத்தில் மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும். ஜியோ, டி- மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் உணவு பொருட்கள், மற்றும் மருந்து பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மாநில அரசு சொத்து வரியை ஆண்டு தோறும் 6 சதவீதம் உயர்த்துவதை திரும்ப பெற வேண்டும். வணிக வரி உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். மின்கட்டணம் மாதந்தோறும் வசூலிப்பதை நடைமுறை படுத்த வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாவட்டத் தலைவர் ஆர்.கே.சண்முகவேல் தலைமை வகித்தார். பேரமைப்பின் மாநில கூடுதல் செயலாளர் எஸ்.ராஜசேகரன், பேரமைப்பின் கோவை மண்டல தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
ஈரோடு மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் வி.துரைசாமி, ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கச் செயலாளர் பி.சுரேஷ், ஈரோடு மாநகர இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத் தலைவர் பாபு, பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெக்னிசியன்ஸ் அசோசியேசன் மாநிலத் தலைவர் ஆர்.கிருபானந்தா, பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ.லாரன்ஸ் ரமேஷ் ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினர்.
முன்னதாக மாநில துணைத் தலைவர் திருமூர்த்தி வரவேற்பு உரையாற்றினார். இறுதியில் மாவட்ட பொருளாளர் உதயம் பி.செல்வம் நன்றி உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செய்தி தொடர்பாளர் சாதிக் பாட்சா, மாவட்ட துணை தலைவர்கள், துணைச் செயலாளர், மாநகர நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் இணைப்புச் சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
0 coment rios: