ஞாயிறு, 22 டிசம்பர், 2024

ஈரோட்டில் குழந்தையை ஆபத்தான முறையில் நிற்க வைத்து இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற தாய்

ஈரோட்டில் தாய் தனது குழந்தையை ஆபத்தான முறையில் நிற்க வைத்து இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்கள் விபத்துகளானது அதிகரித்த வண்ணம் காணப்பட்டு வருகிறது. மேலும், இதில் சிறுவர்கள் பலரும் ஆபத்தான முறையில் பெற்றோர்கள் ஏற்றி செல்லும் பொழுது விபத்துக்குள்ளாகும் காட்சிகளும் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான வ.உ.சி., பூங்கா சாலையில், பெண் ஒருவர் தனது ஆண் குழந்தையை பள்ளி முடிந்த பின் இருசக்கர வாகனத்தில் நிற்க வைத்தபடி ஆபத்தான முறையில் அழைத்துச் சென்றுள்ளார்.

இதுபோன்று, குழந்தைகளை கவனக்குறைவாக அழைத்துச் செல்லும் பெற்றோர்களால் விபத்துக்கள் ஏற்பட்டு அசம்பாவிதம் நேரிடுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். 

பெண் ஒருவர் தனது குழந்தையை ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் காட்சியானது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: