சேலம்.
சேலம் எம் பெருமாபாளையம் கரடு புறம்போக்கு பகுதியில் வீடு கட்டி வசிக்க தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். பட்டியல் சமுதாய மக்கள் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி எம் பெருமா பாளையம் ஆதிதிராவிடர் நீதி பகுதியில் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு வழங்க வந்திருந்தனர். அந்த மனுவில் கடந்த 20 வருடங்களாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். மேட்டுப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகில் கரடு புறம்போக்கில் மற்ற உயர் ஜாதியினர் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு மேற்படி கரண்டு புறம்போக்கு இடத்தில் பட்டாவோ வேறு எந்த ஆவணங்களோ கிடையாது. ஆனால் எங்கள் பட்டியில் என சமுதாய மக்களுக்கு மேட்டுப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகில் கரண்ட் புறம்போக்கு இடத்தில் நாங்கள் வீடு கட்டி வசித்து வருவதற்கு வீட்டு மனை பட்டா கேட்டு சென்றால் மேற்படி கரடு புறம்போக்கு இடத்தில் எங்களை வீடு கட்டி குடியிருக்க முடியாது என்றும் இந்த இடத்தில் பட்டியல் சமுதாய மக்களான உங்களுக்கு இடம் இல்லை என்றும் வாழப்பாடி வட்டாட்சியர் காரிப்பட்டி வருவாய் அலுவலர் மற்றும் மேட்டுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மருத்து மேற்படி கரடு புறம்போக்கில் இடம் தர மருத்துவ வருகிறார்கள்.
ஆனால் மேட்டுப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகில் கரடு புறம்போக்கில் உள்ள இடத்தில் சேலத்தில் உள்ள கிருபா மருத்துவமனையில் உள்ள கிறிஸ்தவ சபையில் உள்ள மக்களின் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக இந்த இடத்தினை பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு மேற்படி வாழப்பாடி வட்டாட்சியர் காரிப்பட்டி வருவாய் அலுவலர் மற்றும் மேட்டுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்கள் உடனடியாக இருந்து வருவதாகவும் ஆனால் தங்களை போன்ற பட்டியல் இனத்தைச் சார்ந்த எங்களுக்கு மட்டும் மேற்படி இடத்தில் குடியிருக்க வீடு கொடுக்க மறுத்து வருகிறார்கள் என்றும் அந்த மனதில் குறிப்பிட்டிருந்தனர். ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் எங்களின் மனுவிற்கு கருணையுடன் பரிசீலனை செய்து பட்டியல் இனத்தைச் சேர்ந்த எங்களுக்கு மின்வாரிய அலுவலகம் அருகில் கருட புறம்போக்கில் வீடு கட்டி வசித்து வருவதற்காக எங்களுக்கு பட்டா வழங்கி உதவ வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொண்டனர். இது தொடர்பாக பலமுறை புகார் கொடுத்தும் தங்களுக்கு எந்த விதமான பலனும் கிடைக்காததால் மாவட்ட ஆட்சியரும் தங்களது மனு மீது நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டங்களாக பல போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பூபதி பொது மக்களின் சார்பாக எச்சரிக்கை விடுத்தார்.
0 coment rios: