வியாழன், 26 டிசம்பர், 2024

மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சேலம் மாணவர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மலர் அஞ்சலி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சேலம் மாணவர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மலர் அஞ்சலி. 

இந்திய திருநாட்டின் முன்னாள் பாரத பிரதமர் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர் உட்பட பன்முகம் கொண்ட மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில் உடல் நலத்துறைவால் உயிரிழந்தார். இதனை அடுத்து காங்கிரஸ் உட்பட கூட்டணி கட்சியினர் எதிர்க்கட்சிகள் என நாடு முழுவதும் அவரது மறைவிற்கு தங்களது இரங்கல்களை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளதுடன் கட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன. 
இதன் ஒரு பகுதியாக மறைந்த பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சேலம் முள்ளுவாடி கேட்டு அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விட்டிருந்த நிலையில், பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ ஆர் பி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த மலர் அஞ்சலி நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி துணை மேயர் திருமதி சாரதா தேவி உட்பட கட்சி நிர்வாகிகள், கோபி குமரன் குமரேசன் பர்வேஷ் நிசார் நாகராஜன் சஞ்சய் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பன்முகம் கொண்ட மன்மோகன் சிங் அவர்களின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: