செவ்வாய், 10 டிசம்பர், 2024

கணவர் அவரது சகோதரர்கள் சுப்ரமணி, மணிகண்டன் மற்றும் அவர்களது பெற்றோர் லட்ச கணக்கில் பணம் கேட்டு நாள்தோறும் துன்புறுத்துவதாக பெண் குற்றச்சாட்டு. அவர்கள் மீது குடும்ப வன்முறை ( Domestic Women Harassment ) சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதி வழங்கி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட பெண் தனது 8 மாத குழந்தையுடன் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்....

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

கணவர் அவரது சகோதரர்கள் சுப்ரமணி,  மணிகண்டன் மற்றும் அவர்களது பெற்றோர் லட்ச கணக்கில் பணம் கேட்டு நாள்தோறும் துன்புறுத்துவதாக பெண் குற்றச்சாட்டு. அவர்கள் மீது  குடும்ப வன்முறை ( Domestic Women Harassment ) சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து 
நீதி வழங்கி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட பெண் தனது 8 மாத குழந்தையுடன்  சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார்....

சேலம் ஜாகிர் அம்மா பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு துறை அதிகாரியின் மகள் ஹரிணி இவருக்கும், ஏற்காட்டைச் சேர்ந்த மணி என்பவரது மகன் சந்திர சந்திரகுமார் ஆகியோருக்கும்   கடந்த செப்டம்பர் மாதம் 2022 முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இருவருக்கும் திருமணம் முடிந்து சில மாதங்கள் ஹரிணியின் கணவர்  மற்றும் அவரது குடும்பத்தார் நன்கு கவனித்து வந்த நிலையில், கணவர் சந்திரகுமார் அவர்கள் அவரது  சகோதரர் சுப்ரமணி மற்றும் மணிகண்டன் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு  அவர்களின் தூண்டுதலின் பெயரில் மனைவி ஹரிணியை பல வகையில்  கொடுமை செய்ய ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் துன்புறுத்தலையும் கனவால் ஏற்படும் தாக்குதலையும் சமாளிக்க முடியாமல் பாதிக்கப்பட்ட பெண் ஹரிணி தனது குடும்பத்தாருடன் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவியை அணுகி உள்ளனர். அதன் பேரில் பாதிக்கப்பட்ட பெண் ஹரிணி சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். 
அந்த மனுவில் தனது கணவர் சந்திரகுமார், அவரது சகோதரர் சுப்ரமணியும் மற்றும் மணிகண்டன் ஆகியோருடன் தொழில் செய்ய கட்டாயபடுத்தியும், சொல்லமுடியாத அளவிற்கு  தொல்லை கொடுத்ததால் சில லட்சங்கள் எனது பெற்றோர் அவர்களுக்கு கொடுத்துள்ளனர் என்றும், பிறகு சேலம் செட்டிசாவடியில் வீடு கட்ட ஆரம்பித்த எனது கணவர் சந்திரகுமார் அதற்கு பல லட்சம் என் பெற்றோரிடம் வாங்கி கொடுக்க மிரட்டியும், அடித்து துன்புறுத்தியும் என்னை  எனது பெற்றோர் வீட்டிற்கு துரத்திவிட்டார் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் என்  பெற்றோரும் வீடு கட்ட 7 லட்சம் ரூபாய் வரை அவர்களுக்கு  கொடுத்து எனது வாழ்க்கையை பாதுகாத்தனர் என்றும் அந்த வீடு வேலை முடிந்தும் அந்த வீட்டில் குடி போகலாம் என்று கூறி பல லட்சம் பெற்ற எனது கணவர் சந்திரகுமார்  வீடு வேலை  முடிந்தும் என்னை அதில் குடி வைக்காமல் அவரது சகோதரர்  சுப்ரமணி, மணிகண்டன் ஆகியோரின் தூண்டுதலின் பெயரில் மீண்டும் பல லட்சம் என் பெற்றோரிடம் வாங்கி வர அடித்து துன்புறுத்தி குடும்ப வன் கொடுமை செய்தும் வருகின்றார் என்று குறிப்பிட்ட அந்த மனுவில், கடந்த 18 மாதங்களாக எனது  கணவரை தூண்டிவிட்டு பணம், நகை வாங்கி தர சொல்லி மிக கேவலமாக துன்புறுத்தியும், வன்கொடுமை செய்ய நேரடியாக அச்சுறுத்தி வரும் சுப்ரமணி, மணிகண்டன் மற்றும் கணவரின் பெற்றோர் ஆகியோரை கைது செய்து முறையாக  விசாரித்து அவர்கள் மீது பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சட்டபடி நடவடிக்கை எடுத்து தனது 8 மாத குழந்தைக்கும் சட்ட பாதுகாப்பும், சமூக பாதுகாப்பும் வழங்கிட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் ஹரிணி தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். 
அதுமட்டுமில்லாமல் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் தனக்கும், எனது 8 மாத குழந்தைக்கும் ஏற்படும் உயிர் இழப்பு ஏனைய அத்தனை இழப்பிற்கும்  சுப்ரமணி, மணிகண்டன் மற்றும் எனது கணவரே பொறுப்பாக  இருப்பதால், சமூக  நீதி வழங்கிடகோரி  இந்த புகார் மனுவை அளிக்கின்றேன் கண்ணீர் மல்க குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புகார் மனு சென்னையில் உள்ள பெண்கள் ஆணையத்திற்கும்,  சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், சேலம் மாநகர காவல் துறை ஆணையாளர் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கையை குழு ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: