வியாழன், 9 ஜனவரி, 2025

ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் எதிர்வரும் திருவள்ளுவர் தினம் (ஜன.15) மற்றும் குடியரசு தினம் (ஜன.26) ஆகிய தினங்களை முன்னிட்டு மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஜன.15 மற்றும் 26 ஆகிய இரு தினங்கள் முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள் அதனுடன் இயங்கும் பார்கள், எப்எல்2 கிளப்கள் மற்றும் எப்எல்3 ஹோட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.

அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. மேலும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: