வியாழன், 9 ஜனவரி, 2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணும் மையமான சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற பிப்.5ம் தேதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.8ம் தேதி எண்ணப்படுகிறது. அதன்படி, ஈரோடு, சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா நேற்று (ஜன.9) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் அவர் பார்வையிட்டார். மேலும், வாக்குப்பதிவு முடிவுற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பாதுகாத்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், தேர்தல் நடத்தும் அலுவலரும், ஈரோடு மாநகராட்சி ஆணையாளருமான மரு.மனிஷ், தேர்தல் வட்டாட்சியர் சிவசங்கர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: