இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதேபோல், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் சீதாலட்சுமியும் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 66 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. வேட்பு மனுக்களை 20ம் தேதிக்குள் வாபஸ் பெறலாம். அன்று மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்பட உள்ளது.
0 coment rios: