ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகர் மகன் ராகுல் (வயது 27). கேலி கிண்டல் வீடியோ செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவரான இவர், அதுதொடர்பான வீடியோக்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வந்துள்ளார். அதுமூலம் சோஷியல் மீடியாவில் பிரபலமடைந்தார். குறிப்பாக, யூடியூப் சேனலில் 3 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி நேரு நகரைச் சேர்ந்த வேலுமணி மகள் தேவிகாஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று இரவு ராகுல் இருசக்கர வாகனத்தில், ஈரோட்டில் இருந்து கவுந்தப்பாடிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கவுந்தப்பாடி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறிய இருசக்கர வாகனம், சாலை நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதியது. இதில், ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: