அதேசமயம், இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கீ.சீதாலட்சுமி கடைசி நாளான நாளை (ஜன.17ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்.
எனவே, வரும் இடைத்தேர்தலில் திமுக - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இடையே இருமுனைப் போட்டி உறுதியாகி உள்ளது. கடந்த இடைத்தேர்தலில் நான்கு முனைப் போட்டிகளை பார்த்த வாக்காளர்கள் இந்த முறை இருமுனைப் போட்டியை சந்திக்க உள்ளனர்.
இதனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்குமா இருக்குமா? அல்லது மந்தமான நிலையில் இருக்குமா? என்பது அடுத்து வரும் நாட்களில் தெரிய வரும்.
0 coment rios: