வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி வீடு வீடாக மக்களை சந்திப்பது என்பது கடமையாக கருதுகிற கட்சி திமுக என தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி.
வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுகவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.சி சந்திரகுமாருக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு வீட்டு வசதி துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில், ராஜ்யசபா உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி சச்சிதானந்தம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி சார்பில் பயணிக்கும் பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இன்று இரண்டாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்,
தொடந்து தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பேட்டியளித்தார்.
அப்போது, ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக வி.சி சந்திரகுமார் அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார், சில பேர் வேட்பாளராக வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சரிடம் கேட்டிருந்தார்கள்.
கேட்டவர்கள் அத்தனை பேரும் மிக தகுதியானவர்கள். அதனால் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு நாள் அவகசம் தேவைப்பட்டது. அதற்குப் பின்னால் அனைவரின் ஒப்புதலோடு வி.சி சந்திரகுமார் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அனைத்து தோழமைக் கட்சியினரும் தோழமை உணர்வோடு இந்த தேர்தலில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
76 அமைப்புகள், 24 அரசியல் கட்சிகள் எங்களுக்கு துணையாக இணைந்து பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்,33 வார்டுகள் இந்த பகுதியிலே இருக்கிறது. தற்போது நான்கு வார்டுகளில் உள்ள வாக்காளர்கள் தான் வாக்குகளை சேகரித்துள்ளோம், மிகப் பெரிய அளவில் தாய்மார்கள் வரவேற்பு கொடுத்து, அத்தனை வாக்காளர்களும் திமுக வேட்பாளருக்கு முழுமையாக ஆதரவு அளித்துள்ளனர்,
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள், கடந்த மூன்ரை ஆண்டுகளில் செய்த பணிகள்தான் மக்களிடத்தில் இவ்வளவு பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. அதேபோல துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த போதும், பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மக்களுக்கான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது, எனவே மக்களின் வரவேற்பும் ஆதரவும் பெருகி உள்ளது, ஆகவே இந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்பதுடன், மக்களுக்கான பணியை தொடர்ந்து செய்வோம் எனவும் தெரிவித்தார்,
மேலும், வருகின்ற 17ஆம் தேதி 12 மணிக்கு பெருந்துறை சாலையில் உள்ள பணிமனையிலிருந்து புறப்பட்டு, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளோம் என பேட்டி அளித்தார்.
0 coment rios: