திங்கள், 6 ஜனவரி, 2025

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள்: ஈரோடு ஆட்சியர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக புகார்கள் ஏதேனுமிருப்பின் இலவச தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை வரும் ஜன.14ம் தேதி தேதியன்று சிறப்பாக கொண்டாடும் விதமாக பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ மற்றும் முழுக் கரும்பு 1 ஆகியவற்றை உள்ளடக்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெறுவதற்கு பகுதி வாரியாக ஜன.8ம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்படும். டோக்கன்கள் பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் ஜன.9ம் தேதி முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம்.

இப்பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக புகார்கள் ஏதேனுமிருப்பின் 1967 மற்றும் 18004255901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் மற்றும் 0424-2252052 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பினை பயனாளிகள் பெற்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: