செவ்வாய், 7 ஜனவரி, 2025

பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, டிசம்பர் 17ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

இந்நிலையில், ஈரோடு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (ஜன.7) செவ்வாய்க்கிழமை மதியம் வெளியிட்டுள்ளது. அதில் பிப்ரவரி 5ம் ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் ஜனவரி 17ம் தேதி ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 18ம் தேதி நடைபெறுகிறது.

மனுக்களை வாபஸ் பெற ஜனவரி 20ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவு பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ம் தேதி நடைபெறுகிறது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: