S.K. சுரேஷ்பாபு.
விபத்துக்கு மற்றும் உடல் நலக் கோளாறால் தவிப்பவர்களுக்கு முதற்கட்ட முதல் உதவி சிகிச்சை குறித்த பயிற்சி. சேலம் CJ பள்ளாஜியோ நட்சத்திர விடுதி ஊழியர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் சார்பில் பயிற்சி.
தமிழகத்தில் நிமிடத்திற்கு ஒரு முறை வாகன விபத்துகள் ஏற்பட்டு அதனால் பாதிக்கப்படுபவர்கள் 108 அவசர ஊர்தி வாயிலாக மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றன. அதுபோல் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நபர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி அவர்களை உயிர் பிழைக்க செய்பவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஊக்க தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வாகன விபத்துக்கள் மற்றும் எதிர்பாராமல் நிகழும் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதற்கட்டமாக முதல் அவசர சிகிச்சை அளித்து அவர்களை எவ்வாறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவது என்பது குறித்தான பயிற்சி சேலத்தில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியான CJ பள்ளாஜ்ஜியோ- வில் நடைபெற்றது.
விடுதியின் பாதுகாப்பு அதிகாரி சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில் முதன்மை பொறியாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் எமர்ஜென்சி டெக்ஸ்ட் டெக்னீசியன்கள் ராகவன் கண்ணன் மற்றும் பைலட் அசோக் ஆகியோர் நட்சத்திர விடுதி பணியாளர்களுக்கு விபத்தில் காயம் ஏற்படுபவர்கள் எவ்வாறு முதல் உதவி செய்வது மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு எவ்வாறெல்லாம் முதலுதவி செய்வது இது போன்ற பல்வேறு உடல் பாதிப்புகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு முதற்கட்டமாக முதலுதவி சிகிச்சை எவ்வாறெல்லாம் வழங்குவது என்பன குறித்து விரிவாக 108 நிர்வாகத்தினர் பயிற்சி அளித்தனர்.
இந்த பயிற்சி குறித்து நட்சத்திர விடுதியில் பாதுகாப்பு அதிகாரி சுந்தரமூர்த்தி கூறுகையில் ஆண்டுதோறும் இரண்டு முறை தங்களது விடுதியில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பணியாளர்களுக்கும் இது போன்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் இது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அதே போல் மற்றவர்களுக்கு உதவி அவரின் உயிரை பாதுகாக்க ஏதுவாக உள்ளதாக 108 நிர்வாகத்திற்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
0 coment rios: