புதன், 8 ஜனவரி, 2025

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டி.?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிச.14ம் தேதி காலமானார். 
பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். பிப். 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், ஈரோடு மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர்ஜிகே என்கிற ஜி.கார்த்திக் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளை நிர்வாகிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: