ஞாயிறு, 19 ஜனவரி, 2025

தமிழக முழுவதும் உள்ள பஞ்சமி மற்றும் ஏடி கண்டிஷன் நிலங்களை பராமரிக்க தனி நல வாரியம் அமைக்க வேண்டும். தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு மற்றும் தமிழ்நாடு ஊழியர்கள் கூட்டமைப்பு முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.

 
சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழக முழுவதும் உள்ள பஞ்சமி மற்றும் ஏடி கண்டிஷன் நிலங்களை பராமரிக்க தனி நல வாரியம் அமைக்க வேண்டும். தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு மற்றும் தமிழ்நாடு  ஊழியர்கள் கூட்டமைப்பு முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு மற்றும் தமிழ்நாடு  ஊழியர்கள் கூட்டமைப்பு முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலம் சின்ன திருப்பதி பகுதியில் நடைபெற்றது. தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்ட இந்த கூட்டத்தில், தமிழகம் முழவதும் உள்ள பஞ்சமி மற்றும் ஏ.டி கன்டிசன் நிலங்கள் சுமார் 1 லட்சம் எக்டர் மேலாக உள்ள நிலங்களை மாவட்டம் வாரியாக அட்டவனை படுத்தி தனி வாரியம் ( AD condition Land Board ) முஸ்லிம் வக்ஃப் போர்ட் போல  அமைக்க தமிழக அரசை வலியுறுத்துகின்றோம், தமிழகம் முழவமும் ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளபல  லட்ச கணக்கான பஞ்சமி மற்றும் A.D condition நிரங்களை உடனடியாக மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் நல துறை அதிகாரிகள், வட்டாச்சியர் மற்றும் காவல் துறை ஒத்துழைப்போடு மீட்டெடுக்க வேண்டும்.
அந்த நிலங்களை A.D condition Board வசம் ஒப்படைக்க வேண்டும் மற்றும்
இந்த பல லட்சம் ஏக்கர் நிலங்களை  A.D condition Land Board மூலம் பாதுகாத்திடவும்,  இந்த நிலங்களை குத்தகை விட்டு அதன் வருமானத்தை பட்டியலின ஏழை மாணவர்களுக்கு  நிதி உதவி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ராமன், 
ராஷ்ரிய ஜனதா தல், கருணாநிதி, 
அரசு போக்குவரத்து, ரவிணந்திரன்
கூட்டு நடவடிக்கை குழு, கார்த்தி
PWD, பரணுராமன்
LIC மற்றும் குமுதா, லட்சுமி
மகளிர் விடுதலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: