ஞாயிறு, 5 ஜனவரி, 2025

ஈரோட்டில் சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்

ஈரோடு அசோகபுரம் அருகே சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.

ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார். இவர் இன்று (ஜன.5) காலை சொந்த வேலை காரணமாக தனது காரில் ஈரோடு - பவானி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அசோகாபுரம் அருகே சென்ற போது காரின் முன் பக்கத்தில் இருந்து திடீரென புகை கிளம்பி வந்துள்ளது.

இதனைக் கண்ட சதீஸ்குமார் உடனடியாக காரை விட்டு இறங்கியுள்ளார். இதனையடுத்து, காரின் முன்பக்கம் தீப்பற்றி மளமளவென எரிந்தது. உடனே, சதீஸ்குமார் அருகில் பெட்ரோல் பங்கில் இருந்த தீயணைப்பு கருவியை எடுத்து வந்து பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைக்க முயற்சித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

இந்த சம்பவத்தில், காரின் முன்பக்கம் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: