இந்நிலையில், கோவையைச் சேர்ந்த நூர் முகமது என்ற சுயேட்சை வேட்பாளர் இறுதிச்சடங்கு செய்யும் முறையில் சேவண்டி, சங்கு, பால் ஆகியவற்றுடன் வேட்பு தாக்கல் செய்ய ஈரோடு மாநகராட்சி அலுவலகம் வந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஈரோடு மாநகராட்சி ஆணையாளருமான மனிஷ்யிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வேண்டும்.
அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் எனக்கூறி இவ்வாறாக நூதன முறையில் வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும், இவர் ஏற்கனவே நடந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் செருப்பு மாலை அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: