அப்போது, அப்பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த, அன்சூர் ரகுமான் (வயது 33), அஜத்துல் ஜமான் (45), ரிடாய் மிடா (29), பேஜிட் (24), சுமான் (28), முகமது அல்மாமுன் (42), முனீர் (57), முகமது ஹவுலாடர் (43), அலமின் மோரோல் (23), முகமது மிஜானூர் ரகுமான் (46), இவருடைய மனைவி ஷானா காத்தூன் (38) ஆகிய 11 பேர் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அவர்கள் 11 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அனைவரும் பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க அவர்கள் 11 பேரும் சென்னை புழல் சிறைக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
0 coment rios: