சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் மாநில அளவில் சிறுவர், சிறுமியர்களுக்கான கேரம் போர்டிகள். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 450 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
தமிழ்நாடு கேரம் சங்கம் மற்றும் சேலம் மாவட்ட கேரம் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும்,12,14-வயது உட்பட்டவர்களுக்கான 64-வது மாநில அளவிலான கேடட் மற்றும் சப் ஜூனியர் கேரம் சப் ஜூனியர் போட்டிகள் சேலத்தில் தொடங்கியது. 2024-2025 ஆம் ஆண்டுக்கான போட்டி நேற்று தொடங்கியது. அகில இந்திய கேரம் சம்மேளனத்தின் துணைத் தலைவர் நாசர்கான் என்கின்ற அம்மான் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியினை, சேலம் மாவட்ட துணை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
சேலத்தில் துவங்கியுள்ள மூன்று நாட்கள் கொண்ட மாநில அளவிலான போட்டி நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டு நாளை கால் இறுதி அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.இதில் வெற்றி பெறும் சிறுவர் சிறுமிகள் விரைவில் வாரணாசியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்று அகில இந்திய கேரம் சம்மேலனத்தில் துணைத் தலைவர் நாசர் கான் என்கின்ற அம்மான் நம்மிடையே தெரிவித்தார்.
இந்த மாநில அளவிலான கேரம் போர்டி நிகழ்ச்சிகளில் சேலம் மாவட்ட கேரம் சங்க செயலாளர் அன்பன் டேனியல், துணைத் தலைவர் லாரன்ஸ் மைய மண்டல செயலாளர் தியாகராஜன் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆய்வாளர் ராபர்ட் கிறிஸ்டோபர், சேலம் சக்தி கைலாஷ் மற்றும் ஏ வி எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் கைலாசம், தமிழ்நாடு கேரம் சென்ற பொதுச் செயலாளர் அர்ஜுனா விருது பெற்ற மரிய இதயம் உள்ளிட்ட ஏராளமானூர் கலந்து கொண்டனர்.
0 coment rios: