ஈரோடு அருகே பிளாஸ்டிக் கயிறு தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென பயங்கர தீ விபத்தால், பல அடி தூரத்திற்கு கரும்புகை வெளியேறி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் மாமரத்து பாளையம் பகுதியில்,ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹரி சிங் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கயிறு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்,
இந்நிலையில், பிளாஸ்டிக் கயிறு தயாரிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது
இதனைக் கண்ட பணியாளர்கள் பதறி அடித்துக் கொண்டு சம்பவ இடத்திலிருந்து வெளியேறினார்,
ஈரோடு தீயணைப்புத் துணைநருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயை அணைக்கும் பணியில் முழு வீச்சில் வருகின்றனர்,
இந்நிலையில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான கயிறு தயாரிக்கும் இயந்திரங்கள், பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் உள்ளிட்டவைகள் தீயில் எரிந்து சேதம் ஏற்பட்டுள்ளது,
தொடர்ந்து மள மளவென கட்டுக்கடங்காமல் தீ பற்றி எரிந்து, பல அடி தூரத்திற்கு கரும்புகை வெளியேறி வருவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
0 coment rios: