செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

ஓய்வு பெற்ற அதிகாரிகளை குறிவைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த ஆன்லைன் வர்த்தக இடைத்தரகர்கள் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்து நீதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

ஓய்வு பெற்ற அதிகாரிகளை குறிவைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த ஆன்லைன் வர்த்தக இடைத்தரகர்கள் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்து நீதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார். 

சேலம் சின்ன திருப்பதி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான இவர், தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளரும், மத்திய மாநில அரசு எஸ்சி எஸ்டி பிரிவு அரசு ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான சரஸ்ராம் ரவி அறிவுறுத்தலின் பேரில், சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு அளிப்பதற்காக தனது குடும்பத்தாருடன் வந்திருந்தார், அந்த மனுவில் தன்னிடம் கடந்த 2023 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மனோகரன் மற்றும் கந்தசாமி ஆகியோர் ஆன்லைன் வர்த்தகத்தின் இடைத்தரவர்களாக பணியாற்றுவதாக கூறி, பணம் முதலீடு செய்தால் இவ்வளவு லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாக பெற்றதாகவும், பிறகு அதற்கான ரசீது மற்றும் முதலீடு பத்திரம் பெறாமல் ஏமாற்றி வந்தனர் என்றும் சம்பந்தப்பட்ட இருவரும் சேலம்  நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓய்வு பெற்ற பணம் வைத்திருக்கும் அரசு ஊழியர்களை குறி வைத்து வீட்டிற்கு சென்று வலுக்கட்டாயமாக பல லட்சம் பணத்தை மோசடி செய்து வந்ததை அறிந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். 
அது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட இருவரிடம் தான் பணத்தை திரும்ப கேட்டபோது ஏதோ ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாகவும் வங்கி கணக்கில் 10 மாதங்களில் இரட்டிப்பு பணம் வரும் என்று ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்த ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி இருவரும் சுமார் 45 நபர்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு பண மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி பண மோசடி செய்து இடைத்தருவர்களான கந்தசாமி மற்றும் மனோகரன் இருவரும் பொய்யான விலாசம் சேலம் மாணவர்கள் காண்பித்து சேலம் மாநகர காவல் அதிகாரியிடம் நிறுவனம் பெயரில் புகார் மனு அளித்துள்ளனர் என்ற நகலையும் தனது புகார் மனுவில் இணைத்துவராகவும், தன்னிடம் பெற்ற பணத்தை நில மூலதனம் என்ற பொய் வார்த்தை கூறி, கிரிப்டோ காயினில் தவறாக அவர்களது சொந்த லாபத்திற்கு பயன்படுத்தி மோசடி செய்த இருவர் மீதும் உரிய சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதி வழங்கிட கோரி புகார் மனு அளித்தார். 
இது குறித்து தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளரான சரஸ்ராம் ரவி செய்தியாளரிடம் கூறுகையில் 
சம்பந்தப்பட்ட இருவரும் இது போன்று பல ஓய்வு பெற்ற அதிகாரிகளிடம் கோடி கணக்கில் பண மோசடி செய்துள்ளதாகவும் தற்போது சேலம் மத்திய குற்ற பிரிவில் அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தின் வாயிலாக அவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: