வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொன்விழா ஆண்டு விழா. SDCBA தலைவர் இமயவர்மபன் மாண்பமை பொருந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி அவர்களுக்கு நேரில் அழைப்பு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொன்விழா ஆண்டு விழா. SDCBA தலைவர்  இமயவர்மபன் மாண்பமை பொருந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி  அவர்களுக்கு நேரில் அழைப்பு.

சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொன் விழா ஆண்டு சேலத்தில் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்புகள் அனைத்தும் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் இமயவரம்பன் தலைமையிலான நிர்வாகிகள் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி உட்பட சார்பு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ்களை கொடுத்து வரவேற்று வருகின்றனர். 
இந்த நிலையில் SDCBA தலைவர் இமயவர்மன் தலைமையில், சங்க நிர்வாகிகள் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு .சதாசிவம் அவர்களை அவர் இல்லத்தில் நேரில் சந்தித்து, சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொன் விழாவிற்க்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் குற்றவியல் சங்கத்தலைவர் ஜெ.மு.இமயவரம்பன் தலைமையில் தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி , மாண்பமை பொருந்திய  திரு.மகாதேவன் அவர்களை சங்கத்திற்கு பக்க துனையாக இருக்கும் நல்ல உள்ளத்தின் உதவியுடன் திருச்சியில் சந்தித்து சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொன்விழா நிகழ்ச்சிக்கு  அழைப்பு விடுத்தனர்.  போற்றுதலுக்குரிய மாண்பமை பொருந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. மகாதேவன் அவர்களும் பொன்விழா ஆண்டில் கலந்து கொள்வதாக  உறுதியளித்தார். அப்போது சங்க செயலாளர் முருகன், பொருளாளர் கண்ணன்,  துனைச்செயலாளர் இரத்தினவேல் மற்றும் செயற்குழு உறுப்பினர் சோழன் ஆகியோர் உடனிருந்தனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: