வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி 500 ஏழை எளியவர்களுக்கு, புதிய அறக்கட்டளையை துவக்கி உள்ள திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம். காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்ச்சி...

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி 500 ஏழை எளியவர்களுக்கு, புதிய அறக்கட்டளையை துவக்கி உள்ள  திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம். காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்ச்சி...

சேலம்  பொன்னம்மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் தெய்வலிங்கம். இவர் 9-வது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினராகவும், இலவச அமரர் ஊர்தி சேவை உள்ளிட்ட ஏராளமான நற்பணிகளை செய்து வருகின்றார். 
பன்முகம் கொண்ட இவரது பொதுநல சேவைக்கு முத்தாய்ப்பாக அறக்கட்டளை ஒன்றையும் துவக்கி உள்ளார். தெய்வா என்ற பெயரில் புதிய அறக்கட்டளை துவக்கி உள்ள மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான தெய்வ லிங்கம், 16-வது நாளான இன்று திமுக தலைவரும், திராவிட மாடலின் நாயகரும் தமிழக முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி,  பொன்னம்மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் அருகே 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய முதியவர்களுக்கு, தெய்வா அறக்கட்டளையின் தலைவரும் மாமன்ற உறுப்பினருமான தெய்வ லிங்கம் மற்றும் அவரது குடும்பத்தார் சார்பில் காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்தார். 
இந்த நிகழ்வில் அறக்கட்டளையின் நிர்வாகிகள்,  நண்பர்கள் மற்றும் கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: