விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்தியின் நெசவுக் கூலியை 10 சதவீதம் உயர்வு: முதலமைச்சருக்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்து தீர்மானம்
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் ஈரோட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் எல்கேஎம். சுரேஷ், செயலாளர்
இரா.வேலுச்சாமி, பொருளாளர் கே.பாலசுப்பிரமணியம், மற்றும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..
இக்கூட்டத்தில்,
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு (மார்ச் 18) செவ்வாய்க்கிழமை அன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில், நிதிநிலை அறிக்கையின் வரலாற்றில் முதல்முறையாக, விசைத்தறிக்கென நிதி ஒதுக்கியதற்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்த பொழுது, விலையில்லா வேட்டி சேலை ரகங்களுக்கு கூலி உயர்வு செய்து தர வேண்டி கோரிக்கை வைத்ததோடு, கைத்தறித்துறை அமைச்சர், கைத்தறி மற்றும் துணி நூல் துறை முதன்மைச் செயலாளருடன், விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் 20 நிமிடங்களுக்கு மேல் நடத்தப்பட்ட ஆலோசனையில்,
விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்திக்கான, கூலி உயர்வை, நடப்பு நிதிநிலை அறிக்கையின், கைத்தறித்துறை மானிய கோரிக்கையில், அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை வைத்ததற்கு, இன்று கைத்தறித்துறை மானிய கோரிக்கையில், விலையில்லா வேஷ்டி உற்பத்திக்கான கூலியை 24 ரூபாயிலிருந்து 26.40 ரூபாய் ஆக உயர்த்தி வழங்கியதற்கும், சேலை உற்பத்திக்கான கூலியை ரூபாய் 43.01 இல் இருந்து 46.75 பைசாவாக உயர்த்தி வழங்கி பல லட்சம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு வழி வகுத்து கொடுத்ததற்கு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, கைத்தறி துறை அமைச்சர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை முதன்மை செயலாளர், கைத்தறித்துறை ஆணையர், மற்றும் துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும், இந்த செயல்பாட்டின் போது கூட்டமைப்பின் கோரிக்கையை அமைச்சர்களுக்கும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் எடுத்துரைப்பதற்கு உறுதுணையாக இருந்த வீட்டு வசதி துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர், செய்தி தொடர்பு துறை அமைச்சர், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0 coment rios: