வெள்ளி, 28 மார்ச், 2025

சேலம் கிழக்கு மாவட்ட தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து இரு வேறு இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் கிழக்கு மாவட்ட தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து இரு வேறு இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு வாரம் வாரம் வழங்கக்கூடிய ஊதியத்தை கடந்த ஆறு மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை, மேலும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டப் பணிகள் முடித்து பத்து மாதங்களாகியும் நிதி வழங்கப்படவில்லை. இதனால் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களும் ஏழை எளிய மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  மத்திய அரசை கண்டித்து, சேலம் கிழக்கு மாவட்ட தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சேலத்தை அடுத்துள்ள காரிப்பட்டி தபால் நிலைய முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மத்திய அரசால் தமிழக அரசுக்கு விளைவித்து வரும் துரோகங்கள் குறித்தும் தமிழகத்தை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் மத்திய அரசின் போக்கை குறித்து பட்டியலிட்டார். 
அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளில் இருந்து தேசியஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் மற்றும் திட்ட பணிகள் செய்த பணியாளர்கள் திட்ட பணிகளுக்கு செங்கல் சிமெண்ட் ஜல்லி கற்கள் எம் சென்ட் திட்டப் பணிகள் செய்து பணம் வழங்காமல் நிலுவையில் நடைபெற்ற இந்த  கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட விவசாய அணியின் துணை அமைப்பாளர் செந்தில்குமார் ஒன்றிய துணை செயலாளர் ஹரி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
ஆர்ப்பாட்டத்தின் விரைவில் மத்திய அரசு தங்களுக்கு கடந்த ஐந்து மாதத்திற்கும் மேலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணியில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்காமல் வஞ்சித்து வந்த நிலையிலும் தங்களது கஷ்டங்களை மறந்து 100 நாள் வேலைத்திட்ட கூலித் தொழிலாளர்கள் தங்களது சோகத்தை மறந்து நடனம் ஆடியது அந்த சுவாரசியத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. 
இதே போல சேலம் கிழக்கு மாவட்ட தெற்கு ஒன்றிய திமுக சார்பில் அயோத்தியாபட்டினம் திமுக ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணை செயலாளர் ஹரி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் தீன தயாளன் மணி வெங்கடேஷ் குமார் பிரபாகரன் மணி அம்மாள் செந்தில் சகாயராஜ் மாசி நாயக்கன்பட்டி சங்கர் சுந்தர் ராமச்சந்திரன் சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: