சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் அரசு உதவி பெறும் பள்ளிக்கு 2 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் போர்டு வழங்கிய தொழில் அதிபர்.
சேலம் கிச்சிபாளையம் நாராயண நகர் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியாக விளங்கி வருவது சிந்தி இந்து துவக்கப்பள்ளி. இந்த பள்ளியில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கல்விகள் போதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பள்ளியில் கிச்சிபாளையம் நாராயண நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏழை எளிய மாணவ மாணவிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர். தனியார் பள்ளிக்கு இணையாக அரசின் உதவி பெறும் தங்களது பள்ளியையும் முன்னேற்றியே தீர வேண்டும் என்ற முனைப்புடன் அந்த பள்ளி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் உதவியுடன் தற்போது வரை போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இருப்பினும் தனியார் பள்ளிகளை போன்று அரசு உதவி பெறும் தங்களது பள்ளியையும் இந்த சமுதாயத்தில் உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்.
இந்த நிலையில் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் சேலம் கிச்சிப்பாளையம் நாராயண நகர் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிந்தி இந்து அரசு உதவி பெறும் பள்ளிக்கு தொழிலதிபர் தனது சொந்த செலவில் ஸ்மார்ட் போர்டு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை தலைமையில் நடைபெற்ற இந்த அர்ப்பணிப்பு விழாவில் சேலத்தின் மிகப்பெரிய தொழில் அதிபரான ஏ வி ஆர் கும்பகோணம் சில்வர் ஷாப் நிறுவன தலைவர் ரமேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது சொந்த செலவில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் போர்டு பள்ளிக்கு அற்பணித்து அதன் கல்விப் பணியை துவக்கி வைத்தார். 73 இன்ச் கொண்ட இந்த பிரமாண்ட போர்டு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த டிஜிட்டல் வடிவில் படங்களை கற்பிக்க இந்த ஸ்மார்ட் போர்டு பயன்படும் என்ற நம்பிக்கையை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொழிலதிபர் ரமேஷ் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பள்ளியில் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் கல்லூரி ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: