வியாழன், 20 மார்ச், 2025

சேலம் பனங்காடு பகுதியில் மாத கணக்கில் தேங்கி கிடக்கும் சாக்கடை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பகுதி மக்கள் சேலம் மாநகர ஆணையாளரிடம் கோரிக்கை மனு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலம் பனங்காடு பகுதியில் மாத கணக்கில் தேங்கி கிடக்கும் சாக்கடை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பகுதி மக்கள் சேலம் மாநகர ஆணையாளரிடம் கோரிக்கை மனு. 

60 கோட்டங்களை உள்ளடக்கியது சேலம் மாநகராட்சி. இதில் சேலம் சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட 22 ஆவது கோட்டமான பனங்காடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாக்கடைகள் மாத கணக்கில் அல்லப்படாமல், அடைத்து சாக்கடையில் செல்ல வேண்டிய கழிவுநீர் சாலைகளில் ஓடிக்கொண்டிருப்பதாகவும் இதனால் அந்த பகுதியினருக்கு நோய் தொற்று உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜ் தலைமையில் ஊர் மக்கள் கோரிக்கை மனு வழங்குவதற்காக சேலம் மாநகராட்சி அலுவலகம் வந்திருந்தனர். 
தங்களது கோரிக்கை மனுவினை சேலம் மாநகர ஆணையாளரிடம் வழங்கிய பின் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும் போது, சாக்கடை செல்லும் பாதையானது பள்ளிகளுக்கு செல்லும் பாதை என்பதால் நாள்தோறும் ஏராளமான பள்ளி குழந்தைகள் இந்த வழியாக பயணம் செய்வதாகவும், இதன் காரணமாக பள்ளி குழந்தைகள் பெறும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர் என்றும் வேதனை தெரிவித்தனர். மேலும் சாலையில் தேங்கி கிடக்கும் சாக்கடை நீரினால் அவ்வப்போது வாகன விபத்துக்கள் ஏற்படுவதோடு 22வது கோட்ட பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர் என்று கூறிய அவர்கள் இந்த பிரச்சனையில் சேலம் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து சீர் செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
 


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: