சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் குத்தகைக்காக விடப்பட்ட 31,890 சதுர அடி நிலம். போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்து கொண்டு சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர். பாதிக்கப்பட்ட மனைவி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி ருக்மணி. இவர்களுக்கு மல்லிகா என்ற மகள் இருக்கிறார். கணவருக்கு சொந்தமாக 31 896 சதுர அடி இடம் சேலம் சிவதாபுரம் பகுதியில் உள்ளது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இந்த நிலத்தின் பத்திரத்தை சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தராவ் என்பவரிடம் குத்தகைக்காக ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பத்திரத்தை குத்தகைக்கு கொடுத்த கோவிந்தராஜ் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் செவ்வாய்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் கோவிந்தராவ் மற்றும் அவரது மகன்கள் பாஸ்கர் மற்றும் ரமேஷ் ஆகியோர் சட்டவிரோதமாக போலியாக கிரயம் செய்துள்ளனர். இதனை அறிந்த ருக்மணி மற்றும் அவரது மகள்கள் சம்பந்தப்பட்ட தொழிலதிபரிடம் சென்று கேட்டபோது இந்த நிலம் எங்களுடையது என்றும் நிலத்தின் பக்கம் வரக்கூடாது என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை எடுத்து பாதிக்கப்பட்ட ருக்மணி மற்றும் அவரது மகள் மல்லிகை ஆகியோர் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுப்பதற்காக வந்திருந்தனர். மேற்கண்ட அந்த மூவரும் எனது கணவருக்கு பாதிக்கப்பட்ட நிலத்தை ஏமாற்றி கரையும் செய்து மோசடி செய்து விட்டனர் வயதான காலத்தில் தனது மகள் மல்லிகா தவிர தனக்கு யார் ஆதரவும் இல்லை எனவே சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தனது கணவருக்கு சொந்தமான நிலத்தை ஏமாற்றி கரியான் செய்த கோவிந்தராவ் பாஸ்கர் மற்றும் ரமேஷ் ஆகிய மீது நடவடிக்கை எடுத்து எங்களது நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 coment rios: