வீட்டின் அறையில் உள்ள பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து பீரோவை பார்த்தார். அப்போது பீரோ லாக்கரில் இருந்த 33 நகை திருட்டுப் போய் இருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் பணிப்பெண் ஜாஸ்மினும் மாயமாகி இருந்தார்.
பின்னர் இது குறித்து சூரம்பட்டி போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரின் விசாரணையில் ஜாஸ்மின் தான் பீரோவில் உள்ள நகையை திருடி சென்றது தெரியவந்தது. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வன்னிப்பாடியில் உள்ள அவரது வீட்டில் பதுங்கி இருந்த ஜாஸ்மீனை சூரம்பட்டி போலீசார் விசாரணைக்காக சூரம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது 33 பவுன் நகையை திருடியதை ஜாஸ்மின் ஒப்புக்கொண்டார். பகன்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
0 coment rios: