வியாழன், 27 மார்ச், 2025

சேலம் மாநகர மக்களின் கோரிக்கைகளை தீர்த்து வைக்க முடியாமல் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேலம் மாநகர மேயிருக்கு புதிய அரையா ? . மக்களின் வரிப்பணத்திற்கு அல்வா கொடுக்க முயற்சிப்பதாக சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் பகிரங்க குற்றச்சாட்டு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாநகர மக்களின் கோரிக்கைகளை தீர்த்து வைக்க முடியாமல் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேலம் மாநகர மேயிருக்கு புதிய அரையா ? . மக்களின் வரிப்பணத்திற்கு அல்வா கொடுக்க முயற்சிப்பதாக சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் பகிரங்க குற்றச்சாட்டு.

60 கோட்டங்களை உள்ளடக்கிய சேலம் மாநகராட்சியின் இயல்பு கூட்டம், மாநகர மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் மற்றும் துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களை சேர்ந்த உதவி ஆணையாளர்கள் கலந்து கொண்ட இந்த இயல்பு கூட்டத்தில், சேலம் மாநகராட்சி 60 கோட்டங்களை உள்ளடக்கிய மாமன்ற உறுப்பினர்கள் தங்களது கோட்ட மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசி வந்த நிலையில், அதிமுக மாமன்ற உறுப்பினர் சேலம் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் விதமாக குடிநீர் வைப்பு கட்டணம் குறைந்தபட்சம் 7500 அதிகபட்சம் 40 ஆயிரமும் வீடுகளுக்கு உயர்த்த கொண்டு வந்த தீர்மானத்தையும்
பயோ கேஸ் தயாரிக்க தனியார் நிறுவனத்திற்கு தினசரி 200 டன் மக்கும் குப்பை மாநகராட்சி நிர்வாகம் வழங்கப்பட வேண்டும் அதற்கு ஒரு டண்ணிற்கு 315 ரூபாய் அந்த நிறுவனம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு வழங்கவும் வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்தும் சேலம் மாநகராட்சி நிர்வாகம் நம்மிடம் இருந்து எடுக்கப்படும் குப்பைக்கு ஒரு டன்னுக்கு 3500 ரூபாய் வழங்குகிறார்கள் ஆனால் அதே குப்பையை நம்மிடம் மாநகராட்சி நிர்வாகத்திடம் வாங்கும் தனியார் நிறுவனம் பெண்ணுக்கு 315 ரூபாய் மட்டுமே வழங்குகிறார்கள்.
மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதை கண்டித்தும் கோடை காலத்தில் மக்கள் குடிதண்ணீர் பிரச்சினையால் அல்லாடும் நிலையில் குடிதண்ணீர் பிரச்சனையை சீரமைக்காமல் சாலைகளை பராமரிக்காமல் அடிப்படைத் தேவைகளை செய்யாமல் புதிய குளு குளு அரை மேயருக்கு ரூபாய் 40 லட்சத்தில் அமைக்க கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை கண்டித்தும் பொது மக்களுக்கு எப்படி எல்லாம் அல்வா கொடுக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக மாமன்றத்தில் மேயருக்கு அல்வா கொடுக்க முயற்சித்த சம்பவம் சேலம் மாநகராட்சி இயல்பு கோட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது.
இன்றைய சேலம் மாநகராட்சியின் இயல்பு கூட்டத்தை பொருத்தவரை, ஒட்டுமொத்த கூட்டத்திற்கும் அல்வா கொடுத்து மற்ற மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களை பேச முடியாமல் செய்த ஒரே பெருமை அதிமுக மாமன்ற உறுப்பினர் செல்வராஜ் கே பொருந்தும் என்பது பொதுவானவர்களின் கருத்தாக உள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: