சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாநகராட்சி 44வது கோட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. உடனடியாக பொதுமக்களின் செயல்பாட்டிற்கு திறந்திடுக. மாநகராட்சி இயல்பு கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன் வலியுறுத்தல்.
60 கோட்டங்களை உள்ளடக்கிய சேலம் மாநகராட்சியின் இயல்பு கூட்டம், மாநகர மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் மற்றும் துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களை சேர்ந்த உதவி ஆணையாளர்கள் கலந்து கொண்ட இந்த இயல்பு கூட்டத்தில், கூட்டம் தொடங்கிய உடனேயே சேலம் மாநகராட்சியின் 44 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் ஜெ.மு. இமயவரம்பன் தனது கோட்ட மக்களின் கோரிக்கைகளை முன் வைத்து பேசினார். முதற்கன் சேலம் மாநகராட்சியின் ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள இளங்கோவன் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, தனது உரையை தொடங்கினார். மாநகர மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆணையாளர் அவர்கள் தங்களுடன் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட இமயவரம்பன், தனது கோட்ட மாமன்ற உறுப்பினராக, தான் பொறுப்பேற்ற பிறகு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டுவதற்காக பூமி பூஜை போடப்பட்டு தற்பொழுது அனைத்து பணிகளும் நிறைவு பெற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளதால் தற்பொழுது அந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறதாகவும் இதனை களைய மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு இருந்தாலுமே கூட அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதில் அதிகாரிகள் சுணக்கம் காட்டக்கூடாது என்றும் வலியுறுத்தி தனது உரையை சுருக்கமாக நிறைவு செய்தார். இதற்கு சேலம் அம்மாபேட்டை மண்டல ஆணையர் அதற்கான விளக்கத்தையும் இயல்பு கூட்டத்தில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: